எகிப்தில் நடைபெறும் ஐ.நாவின் காலநிலை மாற்ற மாநாட்டில் கலந்துகொள்கிறார் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க!
Sunday, October 9th, 2022ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அடுத்த மாதம் எகிப்தில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்ற மாநாட்டில் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மாலைதீவின் சபாநாயகருமான மொஹமட் நஷீட் மற்றும் நோர்வேயின் முன்னாள் சுற்றாடல் மற்றும் காலநிலை அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் ஆகியோருடன் இது தொடர்பில் கலந்துரையாடியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விஜயத்தின் போது ஜனாதிபதியின் சுற்றாடல் தொடர்பான சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜேவர்தனவும் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது
Related posts:
தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்தல்!
ஜனாதிபதி - பிரதமர் முக்கிய சந்திப்பு!
ஐக்கிய அமெரிக்க பழைய மாணவர் நிதிப் பங்களிப்பு - யாழ். பல்கலை மருத்துவ பீடத்தின் தகவல் தொழில்நுட்ப கூ...
|
|