ஊழியர் சேமலாப நிதியை செலுத்தாத தொழில் வழங்குநர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை – அமைச்சர் நிமல் சிறிபால டீ சில்வா!
Friday, August 14th, 2020ஊழியர் சேமலாப நிதியை செலுத்தாத தொழில் வழங்குநர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டீ சில்வா தெரிவித்துள்ளார்.
தொழில் அமைச்சில் நேற்றையதினம் தமது கடமைகளை ஆரம்பித்த அமைச்சர், தொழில் அமைச்சு தொழிலாளர்களுக்காக சேவையாற்றும் இடமாக அன்றி தொழில் வழங்குநர் நிறுவனமாக இருக்கக் கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன் தொழிலாளர்களின் நெருக்கடிகள் பற்றியும் கூட்டுத்தாபனத்தின் செயற்பாடுகள் பற்றியும் தமக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டீ சில்வா இதன்போது தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஆசிரியர்களின் நலன்கருதி வேலைத்திட்டம் - கல்வி அமைச்சர்!
மக்கள் மனதை வெல்வதே இராணுவத்தினரின் இலட்சியம் - கட்டளைத் தளபதி!
பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு!
|
|