ஊர்காவற்றுறை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் தோழர் ஈசனின் தாயாரது பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி அஞ்சலி மாரியாதை!

Monday, July 4th, 2022

ஊர்காவற்றுறை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் தோழர் ஈசன் ஆசீர்வதாம் அன்ரனிராஜ் (2003) அவர்களின் தாயார் ஆசீர்வாதம் அன்னம்மாவின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக பொறுப்பாளர் தலைமையிலான முக்கியஸ்தர்கள் அஞ்சலி மரியாதை செலுத்தியுள்ளனர்.

வயது மூப்பின் காரணமாக சிறிது காலம் நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பெற்றுவந்த அமரர் ஆசீர்வாதம் அன்னம்மா தனது 91 ஆவது வயதில் கடந்த சனியன்று காலமானார்.

இந்நிலையில் அன்னாரது பூதவுடல் ஊர்காவற்றுறையிலுள்ள அவரது இல்லத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.

அன்னாரது இல்லத்திற்கு இன்றையதினம் சென்றிருந்த கட்சியின் மாவட்ட நிர்வாக பொறுப்பாளர் சிவகுரு பாலகிருஸ்ணன், கட்சியின் யாழ் மாவட்ட தலைமை அலுவலக நிர்வாக பொறுப்பாளர் வசந்தன், வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் கமலேந்திரன் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலர் மலர்வளையம் சாத்தி மலர்மாலை அணிவித்து தமது இறுதி அஞ்சலி மரியாதையை செயலுத்தியிருந்தனர்.

அத்துடன் அன்னாரது பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கும் தமது ஆழ்ந்த அனுதாபங்களையும் ஆறுதலையும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: