இத்தாலி நாட்டு சாரதி அனுமதிப்பத்திர கால எல்லை நிறைவு!

Tuesday, October 4th, 2016

இலங்கை சாரதி அனுமதிப்பத்திரங்களை இத்தாலியில் வைத்திருக்கும் இலங்கையர்களுக்கு இத்தாலி நாட்டின் சாரதி அனுமதிப் பத்திரம் பெறுவதற்கான ஒப்பந்தக் காலம் நிறைவுறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த 5 வருட ஒப்பந்தமானது இலங்கை மற்றும் இத்தாலி ஆகிய நாட்டு அரசுகளுக்கிடையில் செய்துக்கொள்ளப்பட்டிருந்ததுடன், இது அடுத்த மாதம் நிறைவுறுவதாகவும் சுட்டிக்காட்டப் பட்டுள்ளது. இந்நிலையில், குறித்த ஒப்பந்தமானது மீண்டும் புதுப்பிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக இத்தாலிக்கான இலங்கைத் தூதுவர் தயா பெல்பொல தெரிவித்துள்ளார்

Untitled-1

Related posts: