ஊரடங்கு சட்டம் தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியான முக்கிய செய்தி!

நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் இன்று அதிகாலை 4 மணிக்கு தளர்த்தப்பட்டுள்ளது.
அத்துடன் இன்றுமுதல் எதிர்வரும் 3ஆம் திகதி வரையில் அனைத்து மாவட்டங்களிலும் இரவு 10 மணிமுதல் அடுத்த நாள் அதிகாலை 4 மணி வரையில் ஊரடங்கு உத்தரவு அமுலாக்கப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு முன்னதாக அறிவித்திருந்தது.
பின்னர் ஜுன் 4ஆம் மற்றும் ஐந்தாம் திகதிகளில் நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுலாக்கப்படவுள்ளது.
ஜுன் 6ஆம் திகதி முதல் சகல மாவட்டங்களிலும் மீள் அறிவித்தல் வரையில் இரவு 10 மணி முதல் மறுநாள் அதிகாலை 4 மணி வரையில் ஊரடங்கு சட்டம் அமுலாக்கப்படவுள்ளது.
கொழும்பு மற்றும் கம்பஹா தவிர்ந்த ஏனைய அனைத்து மாவட்டங்களுக்கும் இடையிலான போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
இனங்காணப்படாத சிறுநீரக நோயைக் கட்டுப்படுத்துவதற்கு அவுஸ்திரேலிய அரசின் ஒத்துழைப்பு!
யாழ்ப்பாணத்தில் பலத்த மழை!
யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாயில் அதிரடி சுற்றிவளைப்பு!
|
|
ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்டதும் உடனடியாக கூட்டுறவு வர்த்தக நிலையங்கள் திறக்கப்படும் - கூட்டுறவு அபி...
தமிழ், சிங்கள புத்தாண்டுக்கு முன்னர் உயர்நதரப் பரீட்சை முடிவகள் வெளிவரும் –கல்வி அமைச்சு அறிவிப்பு!
நாம் ஆட்சிக்கு வந்தது கொழும்பிலிருந்து ஆட்சி செய்வதற்கல்ல – கிராம மக்களிடம் சென்று அவர்களின் தேவைகளை...