ஊரடங்கு உத்தரவு நடைமுறை தொடர்பில் மக்களிடையே குழப்பம் – ஊடக அறிக்கையை வெளியிட்டது ஜனாதிபதி ஊடகப்பிரிவு!

Wednesday, April 29th, 2020

இலங்கையில் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்துவரும் நிலையில் ஜனாதிபதி ஊடக பிரிவு ஊரடங்கு நடைமுறை தொடர்பில் இன்று 29 ஆம் திகதி காலை புதிய அறிக்கை ஒன்டறை வெளியிட்டுள்ளது,

குறித்த அறிக்கையில் கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் தவிர்ந்த ஏனைய 21 மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம்  எதிர்வரும் வெள்ளிக்கிழமைவரை நாளாந்தம் அதிகாலை 5 மணிமுதல் முன்னிரவு 8 மணிவரை தளர்த்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனையின் படி முப்படைகளையும் சேர்ந்த அதிகாரிகளின் விடுமுறைகள் மற்றும் குறுகிய கால விடுமுறைகள் என்பன மறு அறிவித்தல் வரை இரத்து செய்யப்பட்;டுள்ளது.

அத்துடன் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ள பகுதிகளிலும் மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது.

மேலும் அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ள தேசிய அடையாள அட்டை திட்டதுக்கு அமைய அத்தியாவசிய தேவைகளுக்காக வீடுகளில் இருந்து வெளியேற முடியும். அத்துடன் மக்களின் நடமாட்டத்தை குறைக்கும் அடிப்படையில் அரசாங்கம் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா இடர்வலயங்களாக அறிவிக்கப்பட்டுள்ள கொழும்பு, கம்பஹா, களுத்துநை மற்றும் புத்தளம் மாவட்டங்களில் எதிர்வரும் 4ம் திகதி வரையில் ஊரடங்கு சட்டம் நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நடைமுறையில் உள்ள ஊரடங்கு தொடர்பில் மாறுபட்ட தெளிவற்ற கருத்துக்கள் மக்களிடையே இருந்துவரும் நிலையில் இன்று வெளியாகியுள்ள குறித்த அறிக்கை அந்த குழப்ப நிலைக்கு தெளிவு கொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: