ஊடரங்கு சட்டம் தளர்த்தப்பட்டாலும் யாழ்ப்பாணத்தில் புதிய நடைமுறையே அமுலிலிருக்கம் – அரசாங்க அதிபர் மகேசன் அறிவிப்பு!

Tuesday, April 28th, 2020

ஊடரங்கு சட்டம் தளர்த்தப்பட்டாலும் யாழ்.மாவட்டத்தில் தேசிய அடையாள அட்டை இலக்கத்தின் அடிப்படையிலேயே மக்கள் வெளியில் செல்ல முடியும் என்று அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவருடன் தொடர்புகொண்டு கேட்டபோது –

யாழ். மாவட்டத்தில் இன்றுமுதல் வெள்ளிக்கிழமை வரை காலை 5 மணிமுதல் முன்னிரவு 8 மணிவரை நாளாந்தம் ஊடரங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் பொது மக்கள் மிகவும் அவதானமாக நடந்து கொள்ள வேண்டும். அரச நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் இயங்கு நிலைக்கு வருகிறது.

அத்துடன் அத்தியாவசியமற்ற சேவையில் ஈடுபடுபவர்கள் தமது சேவைகளை இடைநிறுத்தி வைப்பது பொருத்தமானதாக இருக்கும். மேலும் அரச அலுவலங்களில் பணிபுரிபவர்கள் மூன்றில் ஒரு பகுதியினர் சுழற்சி முறையில் தமது பணிகளை தொடர பணிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் அனாவசியமாக வீதிக்கு மக்கள் வருவது, தேவையற்ற போக்குவரத்தில் ஈடுபடுவதை மட்டுப்படுத்தப்பட வேண்டும். அத்தியாவசியமாக சேவைகளை அல்லது தொழில்களின் ஈடுபவர்களை தவிர ஏனைய அனைவரும் வீடுகளில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உணவுத் தேவை மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே மக்கள் வீடுகளை விட்டு வெளியில்வர முடியும் என்று தெரிவித்த அரச அதிபர் மகேசன் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள் அடையாள அட்டை இலங்கங்களின்படியே வெளியில் செல்ல முடியும் என்றும் மக்களுடைய தேவையற்ற நடமாட்டத்தை கட்டுப்படுத்துவதற்காகவே அரசாங்கத்தினால் இந்த புதிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும், இதனை மக்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் வெளியில் செல்பவர்கள் கட்டாயமாக சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். இதனை பொலிஸ் மற்றும் இராணுவத்தினர் உண்ணிப்பாக கண்காணிப்பார்கள் என்றும் தெரிவித்தார்

மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் அனுமதி பெற்றவர்களுக்கே மாவட்டங்களை தாண்டி போக்குவரத்தினை செய்வதற்கு இடமளிக்கப்படும்.மேலும் மத வழிபாடுகளுக்காக மக்கள் கூடுவது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது. என தெரிவித்த அவர் ஒவ்வொருவரும் தம்மையும், தமது குடும்பத்தையும், சமூகத்தையும் பாதுகாப்பது அவரவர் ஊடரங்கு உத்தரவை பின்பற்றுவதிலேயே தங்கியுள்ளது என்பதை மக்கள் உணர்ந்து செயற்பட வேண்டும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்

Related posts: