உள்ளூராட்சி தேர்தல் தொடர்பில் சகல பிரிவுகளுடனான கலந்துரையாடலும் நிறைவு – தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவிப்பு!
Monday, January 16th, 2023
உள்ளூராட்சிமன்றத் தேர்தல் தொடர்பில் சகல பிரிவுகளுடனான கலந்துரையாடலும் தற்போது நிறைவடைந்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
காவல்துறை, அஞ்சல் திணைக்களம், அரச அச்சக திணைக்களம் மற்றும் அனர்த்தக முகாமைத்துவ மையம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளுடனான கலந்துரையாடல் நிறைவடைந்துள்ளதாக அதன் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி உலங்கு வானூர்தி சின்னத்தில் போட்டியிடுவதா இல்லையா என்பது தொடர்பான இறுதி தீர்மானம் இன்று எட்டப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
000
Related posts:
தமிழ் மக்கள் தொடர்பில் கோத்தபாய ராஜபக்ச வழங்கிய உறுதி மொழி!
ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றத்தில் 9 ஆயிரத்து 67 பேர் மீது தண்டனை விதிப்பு - பொலிஸ் ஊடகப் பிரிவு தெரி...
தாதியர்களது அர்ப்பணிப்பு வீண்போகாது இருக்க அனைவரும் சுகாதார வழிகாட்டல்களை இறுக்கமாக பின்பற்றுவது அவச...
|
|
|


