உள்ளூராட்சி சபைத் தேர்தல் – உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் படி செயற்படுவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவிப்பு!
Sunday, March 5th, 2023உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் படி செயற்படுவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
தேர்தல் தொடர்பான 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட பணத்தைத் தேக்கி வைப்பதைத் தடுத்து உச்ச நீதிமன்றம் வழங்கிய இடைக்கால உத்தரவு தொடர்பான விசாரணையின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
வாக்குச் சீட்டு அச்சடிக்க அரசு அச்சகத்துக்கு வழங்கப்பட வேண்டிய பணத்தை நிறுத்தி வைப்பதைத் தடுத்து, உச்ச நீதிமன்றம் நேற்று மற்றொரு இடைக்கால உத்தரவை பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
நாட்டில் தொடரும் சீரற்ற காலநிலை: ஏழு பேர் பலி : ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வெளியேற்றம்!
உயிரிழப்புகள் அதிகரிக்கும் ஆபத்து - அரசமருத்துவ அதிகாரிகள் சங்கம்!
பெரும் போகத்திற்கு தேவையான சேதனப் பசளை விநியோகத்திற்கு விசேட திட்டம் - விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தா...
|
|