உள்ளூராட்சிகளின் எல்லை நிர்ணய மேன்முறையீட்டு விசாரணையின் கால எல்லை மேலும் நீடிப்பு!

Thursday, October 20th, 2016

உள்ளுராட்சி மன்றங்களின் எல்லை நிர்ணய நடைமுறை சார்ந்த மேன்முறையீடுகளை விசாரிக்கும் கால எல்லையை டிசம்பர் 31ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக உள்ளுராட்சி மன்ற மாகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் எல்லை நிர்ணய மேன்முறையீட்டுக் குழுவின் கோரிக்கையை ஏற்று கால எல்லையை நீடித்ததாக தெரிவித்த அவர்  டிசம்பர் 31ஆம் திகதிக்கு முன்னர் தனது அறிக்கை சமர்ப்பிக்குமாறு குழுவிற்கு பணிப்புரை விடுத்துள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

எல்லை நிர்ணய மேன்முறையீட்டுக் குழுவின் அறிக்கை முழுமையானதாக இருப்பதை உறுதி செய்வது அரசாங்கத்தின் நோக்கமாகும். அறிக்கiயின் நகலை சகல அரசியல் கட்சிகளுக்கும் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

faysar

Related posts:

மின்னுற்பத்திக்கான எரிபொருள் இன்மையால் வார இறுதி நாட்களிலும் மின்வெட்டு - இலங்கை பொதுப் பயன்பாடுகள் ...
இலங்கை நெருக்கடி மற்றும் உதவிகள் குறித்து இந்திய வெளிவிவகாரங்களுக்கான நாடாளுமன்ற ஆலோசனைக் குழுவுக்கு...
பால் உற்பத்தியை உள்நாட்டிலேயே செய்ய நடவடிக்கை - யாழ்ப்பாணம், கிளிநொச்சி பகுதிகளில் தொழிற்சாலைகளை அமை...

வரி விகிதங்களை திருத்துவது தொடர்பில் நடவடிக்கை - நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய. தெர...
சீரற்ற காலநிலையினால் சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு - பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக விவசாய மற்றும் ...
சாதாரணப் தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்காக நாளையும் திறக்கப்படும் ஆட்பதிவு திணைக்களம்!