உள்நாட்டு விவகாரங்களில் தலையிட்டதில்லை – சீனா !

இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் தாம் ஒரு போதும் தலையிட்டதில்லை என்று சீனா அறிவித்துள்ளது.
இந்த விடயத்தை சீனாவின் இலங்கைக்கான தூதுவர் செங் க்சூயன் இலங்கை தேசிய பொருளாதார சபையின் பொதுசெயலாளரை சந்தித்த போது கூறியுள்ளார்.
கொழும்பில் உள்ள சீனத்தூதரகத்தினால் விடுக்கப்பட்டுள்ள ஊடக அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனா பரஸ்பர கௌரவம், நியாயம் மற்றும் நீதி என்பவற்றுடன் இருதரப்புக்கும் வெற்றியளிக்கும் வகையிலான புதுவித சர்வதேச தொடர்பினை கட்டியெழுப்பி வருகிறது.
இதற்கமைய இலங்கையுடனான சீனாவின் ஒத்துழைப்பானது பொருளாதார மற்றும் சமுக அபிவிருத்தியை இலக்காக கொண்டு மக்களுக்கு பலனை சேர்க்கும் வகையில் முன்னெடுக்கப்படுகிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
திருகோணமலை துறைமுகம் தொடர்பில் சரத் பொன்சேகாவின் கூற்றுக்கு இந்தியா மறுப்பு!
சட்டக் கல்லூரி பரீட்சையை ஆங்கிலத்தில் நடத்துவது தொடர்பான யோசனை நாடாளுமன்றில் தோற்கடிப்பு!
மாணவர்கள் தொடர்பில், பெற்றோருக்கும் முக்கிய பொறுப்பு உண்டு - ஒழுக்கம் குறித்து அதிபர்களுடன் கலந்துரை...
|
|
பூர்த்தி செய்யப்படாத வீதி அபிவிருத்தி பணிகளை பொறுப்பேற்பதற்கு வீதி அபிவிருத்தி அதிகார சபை தீர்மானம்!
உண்மையை ஆராயாமல் கருத்துக்களை வெளியிடுவது எதிர்கட்சி தலைவர் பதவி வகிக்கும் ஒருவருக்கு பொறுத்தமானதல்ல...
இலங்கையில் இந்திய ரூபா பயன்பாட்டுக்கு தீர்மானம் - அரசாங்கம் பரிசீலிப்பதாக அமைச்சர் அலி சப்ரி தெரிவிப...