உள்நாட்டு இறைவரி சட்டமூலம் அரசியலமைப்புக்கு முரணானது – உயர்நீதிமன்றம்!
Saturday, August 5th, 2017
உள்நாட்டு இறைவரி சட்டமூலத்தின் சில பிரிவுகள், அரசியலமைப்புக்கு முரணானதென உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளதாக, சபாநாயகர் கருஜயசூரிய நாடாளுமன்றத்தில், தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கூறியுள்ள அவர்,
உள்நாட்டு இறைவரி சட்டமூலம் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டுமெனில், விசேட பெரும்பான்மையுடன் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டும். இல்லாவிட்டால் சட்டமூலத்தில் திருத்தங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என்று உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது என்றார்
Related posts:
எந்த பிரதேசத்திலும் தனிமைப்படுத்தும் ஊரடங்குச் சட்டத்தை பிறப்பிக்க பின்நிற்கமாட்டோம் - இராணுவத் தளபத...
திரிபோஷா வழங்கலை ஊக்குவிப்பதற்கு இலங்கைக்கு ஆறு இலட்சம் அமெரிக்க டொலர் நிதியுதவி!
வடக்கில் இராணுவம் இருக்க மக்கள் விரும்புகின்றனர் கூட்டமைப்பு மட்டுமே அகற்றக் கோருகிறது - முன்னாள் அம...
|
|
|


