உலக ஊடகவியலாளர்கள் மாநாடு சியோல் நகரில் ஆரம்பம் – இலங்கை உட்பட 25 நாடுகளை சேர்ந்த 35 பேச்சாளர்கள் சிறப்புரை!
Monday, April 25th, 2022உலக ஊடகவியலாளர்கள் மாநாடு தென் கொரியா – சியோல் நகரில் இன்று திங்கட்கிழமை ஆரம்பமாகியது.
இம்முறையும் குறித்த ஊடகவியலாளர்கள் மாநாடு மெய் நிகர் ஊடான மாநாடாகவே இடம்பெறுகின்றது.
தென் கொரிய ஊடகவியலாளர் அமைப்பு ஏற்பாடு செய்யும் இந்த மாநாட்டில் இலங்கை உட்பட 25 நாடுகளை சேர்ந்த 30 பேச்சாளர்களுக்கு கொரிய பிரதமர் கிம் பூ – கியூம் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
ஆனைத்துலக ஊடகவியலில் போலி செய்திகளின் தாக்ககம் மற்றும் அவற்றை எதிர்த்துப் போராடுவதன் முக்கியத்துவம் போன்ற விடயங்களில் அனுபவ பகிர்வு மற்றும் உலக அமைதியில் ஊடகவியலாளர்களின் பங்களிப்பு போன்ற விடயங்களை வலியுறுத்தியதாகவே இம்முறை மாநாடு அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
கற்பித்தல் செயற்பாடுகளை முன்னெடுக்க புதிதாக 20 தொலைக்காட்சி அலைவரிசைகள் - ஊடகத்துறை அமைச்சர் தெரிவிப...
கடந்த ஆறு மாதங்களில் 12 பேர் நீர்வெறுப்பு நோயினால் 12 பேர் உயிரிழப்பு - சுகாதார அமைச்சு தகவல்!
வடக்கு மாகாணத்தில் பல அதிகாரிகளுக்கு இடமாற்றம் - பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சால் அறிவிப்பு!
|
|