உறுதி மிக்க கடவுச்சீட்டுகளை கொண்ட நாடுகளில் இலங்கை முன்னேற்றம்!
Monday, September 26th, 2016
உறுதிமிக்க கடவுச்சீட்டுக்களை கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை முன்னேற்றம் கண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி 8 இடங்கள் முன்னேறி 87வது இடத்தை பெற்றுள்ளதாக 2016ஆம் ஆண்டுக்கான கடவுச் சீட்டு சுட்டெண் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், 39 நாடுகளுக்கு விசா பெற்றுக்கொள்ளாது இலங்கையர்கள் பயணிப்பதற்கு வாய்ப்பு கிட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் வெளியிடப்பட்ட அறிக்கையில் இலங்கைக்கு 95வது இடம் வழக்கப்பட்டிருந்தது. அதன் போதும் விசா இன்றி 39 நாடுகளுக்கு பயணிக்க கூடிய வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது.
இந்த பட்டியிலில் உலகின் பலமான கடவுச்சீட்டாக ஜேர்மன் கடவுச் சீட்டு பெயரிடப்பட்டுள்ள நிலையில், இரண்டாம் இடத்தை சுவீடன் கடவுச்சீட்டும் , மூன்றாம் இடத்தை பின்லாந்து கடவுச்சீட்டும் பெற்றுள்ளது.
எவ்வாறாயினும், நீண்ட காலமாக இலங்கையின் கடவுச்சீட்டு உலகின் குறைந்த வரவேற்பை கொண்டுள்ள கடவுச்சீட்டுடனான நாடாகவே பார்க்கப்படுகின்றது.
இதேவேளை, பின்வரும் நாடுகளுக்கு இலங்கையர்கள் விசா பெற்றுக்கொள்ளாது பயணிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:
|
|
|


