உறவுகளை துண்டிப்பதில் எந்தவித நியாயமும் இல்லை – கட்டார்!

Monday, June 5th, 2017

சில அரபு நாடுகள் கட்டாருடனான இராஜதந்திர உறவுகளை துண்டிப்பதில் எந்தவித நியாயமும் இல்லை என கட்டார் அறிவித்துள்ளது.

சவூதி, ஈஜிப்ட், டுபாய் மற்றும் பஹ்ரைன் உள்ளிட்ட நாடுகள் கட்டாருடனான இராஜதந்திர உறவுகளை துண்டிப்பதாக அறிவித்துள்ளமை தொடர்பில் கட்டார் வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இது தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கைகள் நியாயமற்றது எனவும் எந்த ஆதாரமும் இல்லாத கூற்றுக்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் ஆகியவற்றின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது எனவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, காட்டருடனான இராஜதந்திர உறவுகளை துண்டித்துக்கொள்ளுமாறு சவூதி அரேபியா ஏனைய அரபு நாடுகளுக்கும் கோரிக்கை விடுத்துள்ளது. எனினும் தோஹாவுடனான உறவுகளை துண்டிப்பதில்லை என பாகிஸ்தான் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts:

பயங்கரவாதத்தைக் கையாளும் போது மனித உரிமைகள் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆகியவற்றுக்கு இடையே ஒரு நியாயமா...
மாசி 19 ஆம் திகதிக்கு முன்னர் மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்படும் - 7 இலட்சத்து 47 ஆயிரத்து ...
காசாவில் மக்கள் தஞ்சமடைந்திருந்த பாடசாலை மீது இஸ்ரேல் இராணுவம்வான் வழித் தாக்குதல் - 29 பேர் உயிரிழப...