உயர்தரப் பரீட்சைக்கான அனுமதிப் பத்திரங்கள் இணையத்தளத்தினூடாக!
Tuesday, July 23rd, 2019இந்த ஆண்டிற்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையில் தோற்றும் தனியார் பரீட்சார்த்திகள், நாளை(24) முதல் பரீட்சைகள் திணைக்களத்தின் www.doenets.lk என்ற உத்தியோகபூர்வ இணையத்தளத்தினூடாக அனுமதிப்பத்திரங்களைப் பெற்றுக் கொள்ள முடியும் என, பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தபால் ஊழியர்களால் முன்னெடுக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக அனுமதி அட்டைகளை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் குறித்த இந்த சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பீ பூஜித குறிப்பிட்டுள்ளார்.
இம்முறை உயர்தரப் பரீட்சை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 05ம் திகதி முதல் 31ம் திகதி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
தெற்காசியாவின் அறிவுப் பொக்கிஷம் எரிந்து இன்றுடன் 38 ஆண்டுகள் நிறைவு!
பிரதமரின் தலைமையில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் இரண்டாவது முனைய திட்டத்திற்கான பணிகள் ஆரம...
வாக்காளரின் உள்ளத்தில் உள்ள வெறுப்பை நீக்கி வாக்களிப்பு நிலையத்திற்கு அனுப்ப வேண்டும் - வஜிர அபேவர்த...
|
|