உதிரிபாகங்களின் விலை சடுதியாக அதிகரிப்பு – பாடசாலை போக்குவரத்து சேவைக்கான கட்டணத்தை அதிகரிக்க தீர்மானம்!

Sunday, October 17th, 2021

பாடசாலை போக்குவரத்து சேவைகளை முன்னெடுக்கும் சங்கத்தினால், போக்குவரத்து கட்டணத்தை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வாகன உதிரிபாகங்களின் விலை சடுதியாக அதிகரித்துள்ளமையே இதற்கு காரணமென அந்த சங்கத்தின் தலைவர் எல்.மல்ஸ்ரீ டி சில்வா  தெரிவித்துள்ளார்.

அத்துடன் எரிபொருளின் விலை அதிகரிக்கப்பட்ட சந்தர்ப்பத்திலும் தமக்கான கட்டணத்தை அதிகரிக்கவில்லையென மேற்படி சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதற்கமைய எதிர்வரும் நாட்களில் பாடசாலைகள் மீள திறக்கப்படவுள்ள நிலையில், மாணவர்களின் போக்குவரத்து சேவைக்கான கட்டணத்தை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, எதிர்காலத்தில் எரிபொருளின் விலை அதிகரிக்கப்பட்டால் பேருந்து கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

கண்டியில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தபோதே அவர் இதனைக் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

கட்டுப்பாடின்றி நெல்லை பெற்று கொள்ளவும் : நெல் விநியோக சபைக்கு பணிப்புரை விவசாயத்துறை அமைச்சர் பணிப்...
அஸ்வெசும சமூக நலன்புரித் திட்டத்தின் அடுத்த கொடுப்பனவு நவம்பர் மாதம் முதலாம் திகதிமுதல் வழங்கப்படும்...
பொதுச் செலவினங்களை கட்டுப்படுத்துவது தொடர்பில் சுற்றறிக்கையை வெளியிட்டது நிதியமைச்சு!