உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மூன்று யாழ் .பல்கலைக்கழக மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி !

Friday, March 31st, 2017

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்கள் நேற்று வியாழக்கிழமை காலை பல்கலைக்கழகத்துக்கு முன்பாகவுள்ள இராமநாதன் வீதியில் ஆரம்பித்த நிர்வாக அடக்குமுறைக்கெதிரான உண்ணாவிரதப் போராட்டம் இன்று வெள்ளிக்கிழமை(31) இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது.

13 கலைப்பீட மாணவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வகுப்புத் தடைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கலைப்பீட மாணவர்கள் கடந்த புதன்கிழமை வகுப்புக்களைப் புறக்கணித்து அடையாளப் போராட்டம் மேற்கொண்டிருந்தனர்.  இவ்வாறான நிலையில் நேற்று முதல் வகுப்புத் தடையைக் கண்டித்து 13 மாணவர்களும் பல்கலைக்கழகத்திற்கு முன் சாகும் வரையான உண்ணாவிரதப் போராட்டத்தினை ஆரம்பித்துள்ளனர். உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களிற்கு ஏனைய கலைப்பீட மாணவர்களும் தமது ஆதரவினைத் தெரிவித்துள்ளனர்.
இந் நிலையில் இன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மூன்று மாணவர்களின் உடல்நிலை பாதிக்கப்பட்டு மயக்கமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அனுமதிக்கப்பட்டுள்ளனர். அனுமதிக்கப்பட்ட மாணவர்களில் ஒருவரின் உடல் நிலை கவலைக்கிடமான நிலையில் வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.  nஉண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மேலும் சில மாணவர்களின் உடல் நிலை மோசமடைந்துள்ளது.

Related posts: