உடன் அமுலுக்கு வரும் வகையில் விசேட கண்காணிப்பின் தர்மபுரம் கிராம சேவையாளர் பிரிவு!
Monday, May 17th, 2021தர்மபுரம் கிராம சேவையாளர் பிரிவு விசேட கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. மேலதிக தீர்மானம் நாளை 18 ஆம் திகதி எடுக்கப்படலாம் என சுகாதார பிரிவு தெரிவிக்கின்றது.
நேற்றைய PCR முடிவுகளின் அடிப்படையில் கிளிநொச்சி ,தர்மபுரம் பிரிவில் 08 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அவர்களில் 7ஆம் யூனிற் பகுதியில் 07 பேரும், 5 ஆம் யூனிற் பகுதியில் ஒருவரும், அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் PCR பரிசோதனைகளின் பின்னரே தனிமைப்படுத்தப்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் உடன் அமுலுக்கு வரும் வகையில் குறித்த பகுதி சுகாதார தரப்பினர் மற்றும் இராணுவத்தினரின் விசேட கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதாக மாவட்ட கோவிட் செயலணி தெரிவித்துள்ளது.
மேலதிக விடயங்கள் தொடர்பில் இன்று ஆராய்ந்து தீர்மானம் எட்டப்படும் என மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|