ஈ.பி.டி.பி மீது நாவற்குழியில் கொலைவெறி: படுகாயமடைந்தவர் தீவிர சிகிச்சையில்!

Wednesday, July 15th, 2020

தமிழ் தேசிய முன்னணியின் உறுப்பினர்கள் பலர் ஒன்றிணைந்து ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர் ஒருவர் மீது மேற்கொண்ட கொலைவெறித் தாக்குதலில் படுகாயமடைந்த உறுப்பினர் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் நேற்றையதினம் நாவற்குழி 300 வீட்டுத் திட்ட பகுதியில் நடைபெற்றுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது –

நாவற்குழி பகுதியில் வேள்ட்விஷன் நிறுவனத்தால் வறிய சிறுவர்களுக்கு  உதவித்திட்டங்கள் நேற்றையதினம்(15.07.2020) வழங்கப்பட்டது. இதன்போது அப்பகுதியில் கல்விகற்கும் அதிகளவான சிறுவர்கள் குறித்த உதவித்திட்டத்தை பெற்றுக்கொண்டனர்.

தமிழ் தேசிய முன்னணியினரின் ஆதிக்கத்தில் இருக்கும் குறித்த பகுதி வேள்ட்விஷன் நிறுவனத்தின் நிர்வாகத்தினர் அதை தமது தேர்தல் அரசியலுக்கான பிரசாரமாக பயன்படுத்த முற்பட்டதுடன் ஏனைய கட்சிகளை சார்ந்த சிறுவர்களை ஓரங்கட்டியும் உள்ளனர்.

இந்நிலையில் ஒரு சிறுவனுக்கு வழங்கப்பட்ட உதவி பொருட்களை அவர் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர் ஒருவரது மகன் என அடையாளம் காணப்பட்டதை அடுத்து அப்பொருட்களை குறித்த தமிழ் தேசிய முன்னணியினரின் உறுப்பினர் ஒருவர் பறித்ததுடன் அச்சிறுவனை தள்ளி வீழ்த்தி துரத்தியுள்ளார்.

தாக்கப்பட்ட சிறுவன் அழுதுகொண்டிருந்ததை கண்ட அச்சிறுவனின் தந்தையார் எதற்காக தனது மகன் தாக்கப்பட்டார் என குறித்த நிறுவன அதிகாரிகளிடம் சென்று கேட்க முற்பட்டபோது அவரைத் தடுத்த தமிழ் தேசிய முன்னணியினரின் உறுப்பினர்கள் பலர் ஒன்றநிணைந்து குறித்த ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினரை சரமாரியாக தாக்கியுள்ளனர்.

இதன்போது நிலைதடுமதாறி வீழ்ந்த ஈ.பிடி.பி உறுப்பினரை கால்களால் அவரது நெஞ்சுப் பகுதி மற்றும் அந்தரங்கப் பகுதிகள் மீதும் தமது கொலைவெறித் தாக்குதலை மேற்காண்டுள்ளனர்.

கடுமையான கொலைவெறியுடன் தாக்கப்ட்ட ஈ.பி.டி.பி உறுப்பினரை அப்பகுதியில் நின்ற ஏனைய சில பெற்றோர்கள் முன்னணியினரின் காடையர்களிடமிருந்து பாதுகாத்துள்ளனர். குறித்த தாக்குதலில் படுகாயங்களுக்கு உள்ளான நிலையில் இருந்த ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினரை பொதுமக்கள் சாவகச்சேரி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

இதனிடையே தற்போது ஈ.பி.டி.பி பக்கம் மக்கள் ஆதரவு திசைமாறிச் சென்றுகொண்டிருப்பதை பொறுக்கமுடியாத ஏனைய போலித் தேசிய கட்சிகளான தமிழரசுக் கட்சி மற்றும் தமிழ் தேசிய முன்னணி போன்ற கட்சிகள் ஈ.பி.டி.பி உறுப்பினர்களை இலக்குவைத்து நாளாந்தம் தாக்குதல் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: