ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான முழுமையான விசாரணை அறிக்கை ஆயர்கள் பேரவையிடம் கையளிப்பு!
Tuesday, April 25th, 2023
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழுவின் முழுமையான அறிக்கையை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், கத்தோலிக்க ஆயர்கள் பேரவையிடம் கையளித்துள்ளார்.
கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் தலைவர் குருணாகல் மறைமாவட்ட ஆயர் ஹெரல்ட் அன்டனி ஆண்டகையிடம் அறிக்கை கையளிக்கப்பட்டதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் அனுமதியுடன், ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை கத்தோலிக்க ஆயர்கள் பேரவையிடம் கையளிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
மக்களின் எதிர்பார்ப்புக்கள் நிறைவேற்றப்படாத நிலையிலேயே வடக்கு மாகாணசபையின் ஆட்சி காலம் முடிகிறது - ஈ...
கிண்ணியா படகுப்பாதை - ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட தொழில் நுட்பக் குழுவின் அறிக்கை இன்று சமர்ப்பிப்ப...
கடன் மறுசீரமைப்பிற்கு பிரான்ஸ் அரசாங்கம் ஆதரவளிக்கும் - பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தெரிவி...
|
|
|


