ஈழ மக்கள் ஜனநாயக கட்சியினால் மின்சார உபகரணங்கள் அன்பளிப்பு!

Saturday, October 1st, 2016

அரியாலை முள்ளி அரசடி வீதியைச் சேர்ந்த வறிய குடும்பங்களுக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சியினரால் மின் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகளுக்க்கான மின்கலப் பொருட்களை நேற்றையதினம் (30) பொற்பதி அலுவலகத்தில் வைத்து ஈழமக்கள் ஜனநாயகக்கட்சியின் நல்லூர்தொகுதி நிர்வாகச்செயலாளரும், முன்னாள் நல்லூர் பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவருமான அம்பலம் இரவீந்திரதாசனால் வழங்கி வைக்கப்பட்டது.

இவ் நிகழ்வில் நிர்வாகக்குழு உறுப்பினர்களான பிரதீபன், இரஜீவன், திருமதி.ச.ஜெகதீஸ்வரி மற்றும் திருமதி.ஜெ.தயாளினி ஆகியோர் கலந்து கொண்டனர்.

unnamed

Related posts: