இவ்வருட இறுதிக்குள் மூன்று இலட்சம் குடும்பங்களுக்கு சமுர்த்திக் கொடுப்பனவு!

Monday, August 13th, 2018

சுகல சமுர்த்தி அதிகாரிகளுக்கும் இவ்வருட இறுதிக்குள் நிரந்தர நியமனம் வழங்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்களுக்கு ஓய்வூதியக்கொடுப்பனவு வழங்கப்பட இருக்கிறது. கடந்த ஆட்சிக்காலத்தில் சமுர்த்தி அதிகாரிகள் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டாலும் அவர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படவில்லை.

தற்சமயம் 27 ஆயிரம் சமுர்த்தி அதிகாரிகளும் நான்காயிரத்துக்கும் அதிகமான சமுர்த்தி முகாமையாளர்களும் உள்ளார்கள்.இவ்வருட இறுதிக்குள் மூன்று இலட்சம் குடும்பங்களுக்கு புதிதாக சமுர்த்தி கொடுப்பனவு வழங்கப்பட இருக்கிறதாகவும் அமைச்சர் பி.ஹரிசன் தெரிவித்துள்ளார்.

ஓய்வூதியம் பெறுபவரிடம் இருந்து எந்த வரியும் அறவிடப்படுவதில்லை என்று அமைச்சர் தெரிவித்தார் 2006 ஆம் ஆண்டு முதல் சம்பள முரண்பாட்டை நீக்க அரசாங்கத்திற்கு முடிந்திருப்பதாகவும் அவர் கூறினார். அரச ஊழியர்களுக்கு கூடுதலான சலுகைகளை தற்போதைய அரசாங்கம் வழங்கியிருப்பதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Related posts: