இலங்கை மீது அமெரிக்க வெளியுறவுத்துறையினால் பிறப்பிக்கப்பட்டிருந்த பயண எச்சரிக்கையில் தளர்வு!
Friday, July 9th, 2021
2021 மே, 24 ஆம் திகதி இலங்கைக்கு அமெரிக்க வெளியுறவுத்துறையினால் பிறப்பிக்கப்பட்டிருந்த 4ஆம் நிலை பயண எச்சரிக்கை ஜூலை, 06ஆம் திகதிமுதல் 3 ஆம் நிலை பயண எச்சரிக்கையாக குறைக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்க வெளியுறவுத்துறையினால் வழக்கமாக வழங்கப்படும் பொதுவான பயண எச்சரிக்கையின் பிரகாரம் இலங்கைக்கு 3 ஆம் நிலை பயண எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது.
கொவிட்-19 நிலைமை காரணமாக இலங்கை தொடர்பில் இவ்வாறான பயண ஆலோசனை வழங்கப்படுகின்றபோதிலும் இந்த எச்சரிக்கையில் பயங்கரவாதம் அச்சுறுத்தலும் இயல்பாகவே உள்ளடங்கியுள்ளது.
அத்துடன், கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் விடுத்துள்ள டுவிட்டர் செய்தியில் இலங்கை தொடர்பில் நிலை 03 முதல் நிலை 04 வரையிலான பயண ஆலோசனை வழங்கப்பட்டுள்ளமையானது நாட்டில் நிலவும் கொவிட்-19 நிலைமை கருதி வழங்கப்படுவதாகவும் பயங்கரவாத அச்சுறுத்தல் தொடர்பில் முன்னர் விடுக்கப்பட்ட எச்சரிக்கையில் எந்த மாற்றமும் இல்லை எனவும் தெரிவித்துள்ளது.
இலங்கை பாதுகாப்பு அமைச்சின் மதிப்பீடுகளின் பிரகாரம் பயங்கரவாத அச்சுறுத்தல்கள் அல்லது அது தொடர்பான நடவடிக்கைகள் தொடர்பாக எந்த ஒரு அறிக்கையும் பதிவாகவில்லை என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|
|


