இலங்கை மின்சார சபையை மீள் கட்டமைப்பு செய்ய அமைச்சரவை அனுமதி – அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவிப்பு!

Tuesday, August 2nd, 2022

இலங்கை மின்சார சபையை மீள் கட்டமைப்பு செய்யவும், அதற்கான பரிந்துரைகளை முன்வைக்க குழு ஒன்றை நியமிக்கவும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அமைச்சர் கஞ்சன விஜேசேகர தனது ட்விட்டர் பக்கத்தில் இதனைத் தெரிவித்துள்ளார்.

மின்சார சபையின் மீள் கட்டமைப்பு தொடர்பான முன்மொழிவுகள் ஒரு மாத காலத்துக்குள் சமர்ப்பிக்கப்பட்டு, நாடாளுமன்ற அனுமதிக்காக அனுப்பி வைக்கப்படும் எனவும் அமைச்சர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: