இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபைக்கு புதிய செயலாளர் நியமனம் – மத்திய வங்கி அறிவிப்பு!
Wednesday, September 22nd, 2021
2021 செப்டம்பர் 15 தொடக்கம் நடைமுறைக்குவரும் விதத்தில் நாணயச் சபையின் செயலாளராக உதவி ஆளுநர் ஜே பி ஆர் கருணாரத்ன நியமிக்கப்பட்டுள்ளார் என இலங்கை மத்திய வங்கி அறிவிக்கின்றது.
உதவி ஆளுநர் ஜே பி ஆர் கருணாரத்ன அவுஸ்ரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்திலிருந்து வணிக முதுமானிப் பட்டத்தினையும் கொழும்புப் பல்கலைக் கழகத்திலிருந்து பிரயோகப் புள்ளிவிபரவியலில் பட்டப்பின்படிப்பு டிப்ளோமா பட்டத்தினையும் விஞ்ஞானமானி (பௌதீக விஞ்ஞானம்) பட்டத்தினையும் பெற்றுள்ளார்.
இவர் ஐக்கிய இராச்சியத்தின் பட்டய முகாமைத்துவ கணக்காளர்கள் நிறுவனத்தின் (CIMA) சக உறுப்பினரும் இலங்கை சான்றுபடுத்தப்பட்ட முகாமைத்துவக் கணக்காளர்களின் (CMA) இணை உறுப்பினருமாவார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
சாரதிகளுக்கு முக்கிய அறிவித்தல்!
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் விசாரணை : மூவரடங்கிய் விசேட மேல்நீதிமன்ற தீர்ப்பாயம் நியமிப்பு!
சீனா – இலங்கை இடையிலான விமான சேவைகளை அதிகரிக்க தீர்மானம் - இருதரப்பு வர்த்தக மற்றும் பொருளாதார நடவட...
|
|
|


