இலங்கை நடுக்கடலில் பெயர்ப் பலகை!
Tuesday, May 9th, 2017
இந்திய மீனவர்கள் எல்லைத் தாண்டி மீன்பிடிப்பதை தடுக்கும் வகையில் நடுக்கடலில் இலங்கை பெயர் தரித்த எல்லைப் பலகையொன்று வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தமிழக மீனவர்கள் எல்லைத் தாண்டி மீன் பிடித்தார்கள் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுவதும் அவர்களுடைய படகுகள், கடற்படையினரால் பறிமுதல் செய்யப்படுவதும் என்று இருக்கும் தற்போதைய நிலையிலேயே இந்த எல்லைப் பலகை வைக்கப்பட்டுள்ளது.
இலங்கை இந்திய மீனவர்கள் பிரச்சினைக்கான தீர்வை இரு நாட்டு அரசுகளும் இன்னும் பெற்றுக்கொடுக்கவில்லை இதற்கான பேச்சு நடத்தப்பட்டு வந்த போதிலும் அதற்கான இறுதியான முடிவு எதுவும் இன்னும் எட்டப்படவில்லை. எனினும் தங்களுக்கான எடல் எல்லை என்ன என்பது தெரியாமல்தான் இந்திய மீனவர்கள் எல்லை தாண்டுகின்றார்கள் என்று தமிழக மீனவர்கள் கூறி வருகின்றனர். இந் நிலையில் தமிழக மீனவர்கள் இலங்கைக் கடல் எல்லைக்குள் வந்து விடாமல் தடுப்பதற்காக நடுக்கடலில் எல்லைப் பலகை ஒன்றை கடற்படையினர் வைத்துள்ளனர்.
இலங்கையிலிருந்து 5 ஆவது மணல்திட்டில் இலங்கை கொடியுடன் குறித்த எல்லைப் பலகை வைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தனுஷ்கோடியிலிருந்து 5வது மணல்திட்டில் இந்தியாவும் எல்லைப் பெயர் பலகையை வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
|
|
|


