இலங்கை – தாய்லாந்து இடையே இருதரப்பு உறவை வலுப்படுத்தும் முக்கிய பேச்சுவார்த்தை கொழுப்பில்!

Saturday, August 26th, 2023

இலங்கைக்கும் தாய்லாந்துக்கும் இடையிலான ஐந்தாவது சுற்று இருதரப்பு அரசியல் ஆலோசனைகள் 2023 ஆகஸ்ட் 28 ஆம் திகதி கொழும்பில் உள்ள வெளிவிவகார அமைச்சில் நடைபெறவுள்ளது.

இந்த ஆலோசனையில் வெளிவிவகார செயலாளர் அருணி விஜேவர்தன மற்றும் தாய்லாந்தின் வெளிவிவகாரங்களுக்கான நிரந்தர செயலாளர் சருண் சரோன்சுவான் ஆகியோர் ஈடுபடவுள்ளனர்.

அரசியல், வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு, கலாசாரம் மற்றும் சுற்றுலா உட்பட பரஸ்பரம் உறவுகள் மற்றும் தற்போதைய ஒத்துழைப்பை உள்ளடக்கிய இருதரப்பு உறவுகளின் நிலை ஆகியன இந்த ஆலோசனைகளின் போது மதிப்பாய்வு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இரு நாடுகளுக்கும் இடையிலான நான்காவது சுற்று இருதரப்பு அரசியல் ஆலோசனைகள் 2018 பெப்ரவரி 28ஆம் திகதி கொழும்பில் நடைபெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

2024 ஆம் ஆண்டில் முதல் காலாண்டில் இலங்கை- தாய்லாந்து சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை அமுல்படுத்த கடந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது

Related posts:


வலி மேற்கு மக்களின் தேவைப்பாடுகள் குறித்து ஈ.பி.டி.பியின் ஆலோசனை சபை கூட்டத்தில் விஷேட ஆராய்வு!
அவுஸ்திரேலியா புதிய பிரதமருக்கு ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச வாழ்த்து - இணைந்து பணியாற்றவும் முனைப்பு க...
எவரையும் கைவிடாத வகையில் அஸ்வெசும திட்டத்தை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவுறுத்து!