இலங்கை – சீனா 400 யுவான் உடன்படிக்கை கைச்சாத்து!

Thursday, May 18th, 2017

சீனா மற்றும் இலங்கைக்கு இடையில் பொருளாதார தொழில்நுட்ப புரிந்துணர்வை மேம்படுத்துவதற்காக 400 மில்லியன் யுவான்களை இலங்கைக்கு வழங்குவதற்கான உடன்படிக்கை நேற்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இந்த உடன்படிக்கை சீனால் பீஜிங் நகரில் உள்ள பொதுமக்கள் மகா மண்டத்தில் கைச்சாத்திடப்பட்டது. சீன பிரதமர் லீ கிகிஜாங் (Li Keqiang) மற்றும் இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் முன்னிலையில் சீனாவில் பிரதி வர்த்தக அமைச்சர் வூ சிஜிங் (Fu Ziying) அபிவிருத்தி மூலோபாக மற்றும் சர்வதேச வர்த்தக துறை அமைச்சர் மலிக் சமரவிக்ரமவும் கைச்சாத்திட்டனர்.

Related posts: