இலங்கை- சீனாவுக்கு இடையில் கடல்சார் ஒத்துழைப்பு!

Saturday, April 23rd, 2016

இலங்கை மற்றும் சீனாவுக்கு இடையில் கடல்சார் உறவுகளை மேம்படுத்தமுடியும் என சீனாவின் இலங்கைக்கான தூதுவர் தெரிவித்துள்ளார்

கொழும்பில் நேற்று இடம்பெற்ற கடல்சார் விடயங்கள் தொடர்பான மாநாட்டில் சீன தூதுவர் இசியாங்லியாங் இதனை தெரிவித்துள்ளார்

இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான இந்த கடல்சார் உறவுகள், மீன்பிடி மற்றும் அனர்த்த முகாமைத்துவம் உட்பட்ட விடயங்களில் அமையமுடியும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்மூலம் இரண்டு நாடுகளும் கடல்சார்ந்த உற்பத்தித்துறையில் ஒத்துழைப்புக்களை மேம்படுத்திக்கொள்ள முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்

Related posts: