இலங்கை – சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகளின் பாதுகாப்பில் சிக்கல்!

இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டி நாளை மறுதினம் இடம்பெறவுள்ளது
இந்த போட்டி ஹம்பாந்தோட்டை சூரியவெவ மைதானத்தில் இடம்பெவுள்ளது அடுத்துவரும் மூன்று போட்டிகளும் சூரியவெவ மைதானத்தில் இடம்பெறவுள்ள நிலையில், குறித்த மைதானத்தின் பாதுகாப்பு குறித்து சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
சூரியவெவ மைதானத்தை அண்டிய பகுதியில் யானைகள் சரணாலயம் காணப்படுகின்றது.இந்த நிலையில், குறித்த மைதானத்திற்குள் யானைகள் உள்நுழையும் வாய்ப்புக்கள் அதிகம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனிடையே நேற்றைய தினம் கொழும்பில் இருந்து விசேட குழுவொன்று அங்கு சென்று நிலமைகளை ஆராய்ந்துள்ளதுஅத்துடன் யானைகள் வராமல் தடுப்பதற்கு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
Related posts:
இராணுவ வீரர்களின் நினைவு தூபிக்கு ரஷ்யாவில் ஜனாதிபதி அஞ்சலி!
ரஷ்யப் போர்க்கப்பல் கொள்வனவு மோசமான விளைவை ஏற்படுத்தும்
மின்சார சபை பொறியியலாளர்கள் எச்சரிக்கை!
|
|