இலங்கை கொரோனா தொற்று கட்டுப்படுத்தல் மகிழ்ச்சியான நிலையில் உள்ளது – ஒன்று கூடினால் ஐரோப்பாவை போன்று பேரிடரை சந்திக்க நேரிடும் – IDH வைத்தியசாலை வைத்தியர் எச்சரிக்கை!
Tuesday, April 14th, 2020
இலங்கையினுள் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தலானது இதுவரையில் மகிழ்ச்சிகரமான மட்டத்தில் உள்ளதாக கொழும்பு IDH வைத்தியசாலையின் வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்துள்ளார்.
அத்துடன் வழமையான வாழ்க்கை முறைக்கு எப்போது வருவதென்பதனை பொது மக்களின் செயற்பாட்டிற்கமையவே தீர்மானிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா தொற்றினை முழுமையாக இல்லாமல் செயற்வதற்கு பொது மக்கள் தொடர்ந்து சுகாதார ஆலோசனைகளை பின்பற்ற வேண்டும் என கூறியுள்ள அவர் மக்கள் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக ஒன்று கூடினால் அமெரிக்கா, இத்தாலி, பிரித்தானியா நாடுகளை போன்று பாரிய ஆபத்தினை சந்திக்க நேரிடும் எனவும் தெரிவித்துள்ளார்.
Related posts:
நேற்று அடையாளம் காணப்பட்ட 31 கொரோனா நோயாளிகளில் 21 பேர் கடற்படையினர் - சுகாதார பணிப்பாளர் அனில் ஜாசி...
காலநிலை மாற்றத்தின் காரணமாக உணவுப் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் - விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர எச்சர...
தேர்தல் திருத்தச் சட்டமூலங்களால் தேர்தல்கள் பிற்போடப்படும் என எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் குற்றச்சா...
|
|
|


