இலங்கை எதிர்கொண்ட கடினமான காலங்களில், இலங்கையின் தேவைகளை இந்தியா மிகவும் உணர்ந்து செயற்பட்டது – இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவிப்பு!
Monday, September 4th, 2023இலங்கை எதிர்கொண்ட கடினமான காலங்களில், இலங்கையின் தேவைகளை இந்தியா மிகவும் உணர்ந்து செயற்பட்டதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கடன் நெருக்கடி வளர்ந்து வரும் நாடுகள் உள்ளிட்ட பல உலக நாடுகளுக்க மிகுந்த கவலையளிக்கும் விடயமாக உள்ளதாகவும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தநிலையில் கடனில் சிக்கியுள்ள குறைந்த வருமானம் கொண்ட நாடுகளுக்கு உதவுவதற்காக உறுதியான கட்டமைப்பை உருவாக்குவதற்கு, ஜி20 மாநாட்டில் ஒருமித்த நிலைப்பாட்டை இந்தியா எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம் கடன் நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் பாராட்டத்தக்க முடிவுகள் உள்ளதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வாகன விபத்துக்களில் 2800 பேர் பலி!
மழை பெய்வதற்கு சாத்தியம் – வானிலை அவதான நிலையம்!
தமிழ்க் கைதிகளை அரசாங்கம் வேண்டுமென்றே தடுப்புக்காவலில் வைக்கவில்லை - அவர்கள் மீது கடுமையான குற்றச்...
|
|