இலங்கை இந்த ஆண்டில் 6.9 பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனை மீளச் செலுத்த வேண்டியுள்ளது – நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவிப்பு!
Wednesday, January 5th, 2022இலங்கை இந்த ஆண்டில் 6.9 பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனை மீளச் செலுத்த வேண்டியுள்ளதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் குறித்து தென்னிலங்கை வார இதழ் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் நடப்பு அரசாங்கத்தினால் குறித்த கடனை உரிய முறையில் திருப்பி செலுத்த முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
செலுத்தப்பட வேண்டிய கடன் தவணைகள் இதுவரையில் எவ்வித பிரச்சினையும் இன்றி செலுத்தப்பட்டுள்ளதாகவும் எதிர்காலத்திலும் இவ்வாறே செயற்படுவதாகவும் நிதி அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
கடன் செலுத்தப்படும் அதேவேளை, மக்களுக்கு நிவாரணம் வழங்குதல் மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுத்தல் போன்ற நடவடிக்கைகளும் உரிய முறையில் மேற்கொள்ளப்படுமெனவும் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|