இலங்கை இந்திய பிரதமர்கள் எதிர்வரும் புதன்கிழமை சந்திப்பு!

Monday, April 24th, 2017

இலங்கை, ஜப்பான் மற்றும் இந்தியாவிற்கிடையில் காணப்படும் தொடர்புகள் குறித்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க கருத்து வெளியிட்டார்.

இதன் போது பிரதமர் கருத்து தெரிவிக்கையில் – இந்தியாவும், ஜப்பானும் ஒன்றிணைந்து வேலைத்திட்டங்களை முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளன. ஜப்பானும், இந்தியாவும் இணைந்து எல்.என்.ஜீ. மின் உற்பத்தி நிலையத்தை கெரவலப்பிட்டியவில் அமைக்கவுள்ளன. புதிய தொலைக்காட்சி தொழில்நுட்பத்தினை அவர்கள் வழங்கியுள்ளனர். அதற்கு தேவையான நிதியினை அவர்கள் செலவின் ஒரு பகுதியாக வழங்கியுள்ளனர். ஜப்பான் இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுக்கும் போது இந்தியாவுடன் இணைந்து வேலைத்திட்டங்களை முன்னெடுக்க விரும்பியுள்ளனர்.

Related posts: