இலங்கை – அவுஸ்திரேலியா இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பு வேலைத்திட்டம்!
Sunday, March 17th, 2019இலங்கை மற்றும் அவுஸ்திரேலியாவுக்கு இடையில் பாதுகாப்பு ஒத்துழைப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஆரம்பமாகவுள்ள குறித்த வேலைத் திட்டம் ஒரு வார காலத்திற்கு இடம்பெறும். இதன் கீழ் அவுஸ்திரேலியாவுக்கு சொந்தமான நான்கு கப்பல்கள் இலங்கை வரவுள்ளன.
கம்பெரா மற்றம் நியூகாசெல் ஆகிய இரண்டு கப்பல்கள் கொழும்புத் துறைமுகத்திற்கு வருகை தரவுள்ளதுடன், மேலும் இரண்டு கப்பல்கள் திருகோணமலை துறைமுகத்திற்கு வரவுள்ளன.
அவுஸ்திரேலியாவின் சுமார் 10 ஆயிரம் முப்படை வீரர்கள் இந்த பாதுகாப்பு ஒத்துழைப்பு வேலைத்திட்டத்தில் பங்கு கொள்ளவுள்ளனர்.
அவர்கள் இலங்கையில் முப்படையினருடன், மனிதநேய சேவைகள், அனர்த்தமுகாமை சேவைகள், கடல்வள பாதுகாப்பு, அமைதி காக்கும் வேலைத் திட்டங்கள் பலவற்றில் ஈடுபடவுள்ளனர்.
Related posts:
சிக்கனமாக பயன்படுத்துங்கள் - மின்சக்தி எரிசக்தி அமைச்சு!
13 ஆம் திருத்தத்தின் கீழான ஏற்பாடுகளை முழுமையாக அமுல்படுத்துமாறு இந்திய வெளியுறவு செயலர் மீண்டும் வல...
கசப்பான மறக்க முடியாத அனுபவம் உள்ளதால் எதனையும் அலட்சியப்படுத்த முடியாது - தாக்குதல் நடத்தப்படவுள்ள...
|
|