இலங்கை அன்னாசிகளுக்கு வெளிநாட்டில் சிறந்த கேள்வி!
Saturday, February 16th, 2019இலங்கையின் பழ வகைகளுக்கு வெளிநாடுகளில் கேள்வி நிலவுகின்ற போதிலும் உரிய விநியோக நடவடிக்கைகளை மேற்கொள்ள இலங்கை அரசாங்கம் தவறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை பழ மற்றும் மரக்கறி ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுரேஸ் ஹசீம் இதனைத் தெரிவித்துள்ளார்.
உலக நாடுகளில் இலங்கையின் மொரிஸ் ரக அன்னாசிகளுக்கு சிறந்த கேள்வி நிலவுகிறது. எனினும் விநியோக நடவடிக்கைகளை உரிய வகையில் மேற்கொள்ள முடியாதுள்ளது.
தேவையான அளவு அன்னாசி செய்கை மேற்கொள்ளப்படாமையே இதற்கான காரணம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிறிய அளவில் செய்கைகளை மேற்கொள்ளாது பாரிய அளவில் செய்கைகளை மேற்கொள்ளும் போது குறைந்த செலவில் கூடுதல் லாபத்தை பெறுவதோடு விநியோக செயற்பாடுகளையும் உரிய வகையில் மேற்கொள்ள முடியும் என இலங்கை பழ மற்றும் மரக்கறி ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுரேஸ் ஹசீம் மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
தேங்காய் உடைத்ததாலேயே ஹிலாரி தோல்வியுற்றார் -அமைச்சர் ராஜித சேனாரத்ன
டெங்கு நோய் தீவிரமாக பரவக்கூடிய அபாயம்!
ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றச்சாட்டில் 55 ஆயிரத்து 706 பேர் கைது - பொலிஸ் ஊடகப்பிரிவு!
|
|