இலங்கையில் 45 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுவர்களுக்கு கொரோனா தொற்றுறுதி!

Thursday, August 5th, 2021

இலங்கையில் இதுவரை 45 ஆயிரத்து 831 சிறுவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ எழுப்பிய கேள்விக்கு இன்று வியாழக்கிழமை பதிலளிக்கும் போதே அமைச்சர் இந்த அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார்.

அதன்படி, இதுவரை 10 வயதுக்கும் கீழ்ப்பட்ட 19 ஆயிரத்து 688 சிறுவர்களுக்கு கொவிட் தொற்று உறுதிசெய்யப்பட்டிருப்பதோடு, 10 தொடக்கம் 18 வரையான சிறுவர்களில் 26 ஆயிரம் 143 பேர் கொவிட் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.

18 வயதுக்கும் கீழ்ப்பட்ட 14 சிறுவர்கள் இதுவரை கொவிட் தொற்றினால் உயிரிழந்திருக்கின்றனர்.

அதேபோல, கடந்த 10 நாட்களாக கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்ட 9 ஆயிரம் பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருவதாக அமைச்சர் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: