இலங்கையில் 2 ஆயிரத்து 773 இடங்கள் நுளம்புகள் பெருகும் ஆபத்தான பகுதிகளாக அடையாளம் – தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவிப்பு!
Thursday, September 8th, 2022இலங்கையில் 2 ஆயிரத்து 773 இடங்கள் நுளம்புகள் பெருகும் ஆபத்தான பகுதிகளாக சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு அடையாளப்படுத்தியுள்ளது.
இதற்கமைய, 06 மாவட்டங்களில் உள்ள 2 ஆயிரத்து 773 இடங்கள் டெங்கு நுளம்புகள் பெருகும் அதிக ஆபத்துள்ள இடங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
இலங்கையில் அதிக ஆபத்துள்ள 06 மாவட்டங்களில் 55 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் அண்மையில் நடைமுறைப்படுத்தப்பட்ட விசேட நுளம்பு ஒழிப்பு வேலைத்திட்டத்தின் போது இந்த தகவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, இதுவரை 75 ஆயிரத்து 993 வளாகங்கள் பரிசோதிக்கப்பட்டுள்ளதுடன், 20,704 வளாகங்கள் நுளம்புகள் பெருகிய இடங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
000
Related posts:
பழைய முறையில் மாகாண சபைகளுக்கான தேர்தல் - அமைச்சரவைப் பத்திரம் விரைவில்!
வாய்மூல கேள்விகளுக்கு பதிலளிக்கும் விசேட நாடாளுமன்ற அமர்வு இன்று - தொடர்ந்தும் 33 நாட்களுக்கு நாடாளு...
ஜப்பான், தென்கொரியா மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகளும் மக்கள் விடுதலை முன்னணிக்கு உத்தியோகபூர்வ அழைப்பு...
|
|
துப்பரவு செய்யப்படாத காணிகளுக்கு விரைவில் தண்டப்பணம் அறவிடப்படும் – வேலணை பிரதேச தவிசாளர் கருணாகரகுர...
அரச பேருந்தில் பயணிக்கும் ஒருவருக்கு கொரோனா தொற்றினால் இழப்பீடாக 10,000 உயிரிழந்தால் 50,000 - பற்றுச...
பொதுமக்கள் சூழ்நிலையை கருத்திற்கொள்ளாது செயற்பட்டால் பயணக்கட்டுப்பாடுகளை விதிப்பதில் எந்தவித அர்த்தம...