இலங்கையில் மேலும் இரு உயிரிழப்புகள் பதிவு!

Monday, April 26th, 2021

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் இரு உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

களனி மற்றும் பொலன்னறுவைப் பிரதேசங்களிலேயே இந்த மரணங்கள் பதிவாகியுள்ளதுடன், 79 வயதுடைய பெண்ணும் 73 வயதுடைய ஆணுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 644ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கடந்த 24 மணித்தியாலங்களில் இலங்கையில் மேலும் 783 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து ஆயிரத்து 379ஆக அதிகரித்துள்ளது.

அவர்களில் 94 ஆயிரத்து 311 பூரண குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பியுள்ள நிலையில், தொற்றுக்கு உள்ளான 6 ஆயிரத்து 426 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

Related posts: