இலங்கையில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் முதலீடு செய்வதற்கு இந்திய நிறுவனங்களுக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய எரிசக்தி அமைச்சின் செயலாளர் தெரிவிப்பு!
Sunday, March 17th, 2024
இலங்கையில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் முதலீடு செய்வதற்கான பாரிய சாதகமான வாய்ப்பு இந்திய நிறுவனங்களுக்கு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலை இந்திய எரிசக்தி அமைச்சின் செயலாளர் பூபிண்டர் சிங் பாலா தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 2030 ஆம் ஆண்டளவில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் 70 சதவீத உற்பத்தி என்ற இலக்கை அடைய இலங்கை உழைப்பதே இதற்கான காரணம் என அவர் குறிப்பிட்டார்.
இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையே கடந்த ஜூலை மாதம் கைச்சாத்தான புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் ஒத்துழைப்பை பற்றிய புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் அமைக்கப்பட்ட ஆற்றல் தொடர்பான பணிக்குழுவின் முதலாவது கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் உரையாற்றினார்.
கொழும்பில் நடந்த இந்த சந்திப்பின் போது, அனைத்து தொழில் நுட்ப உதவிகளை இலங்கைக்கு வழங்க இந்திய தரப்பினர் ஒப்புதல் அளித்துள்ளனர்.
இது தவிர, இந்தியாவில் உள்ள முதன்மையான நிறுவனங்களில் சூரிய சக்தி, காற்றாலை போன்றவை உட்பட அந்த துறைகள் தொடர்பானவற்றில் விசேட பயிற்சிகளை அளிக்கவும் முன்வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|
|


