இலங்கையில் பால் உற்பத்தி துறையை ஊக்குவிப்பதற்கு பிரான்ஸ் நிதியுதவி!
Tuesday, July 18th, 2023நாட்டின் பால் உற்பத்தி துறையை அபிவிருத்தி செய்யும் நோக்கில் 250 மில்லியன் ரூபாவினை வழங்குவதற்கு பிரான்ஸ் இணங்கியுள்ளது.
விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர மற்றும் பிரான்ஸ் முகவர் நிறுவன பிரதிநிதிகளுக்கு இடையில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இதற்கான முதற்கட்ட இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
நாட்டின் பால் உற்பத்தியை அதிகரித்தல், பாலின் தரத்தை அதிகரித்தல் மற்றும் கறவை பசுக்களை பராமரித்தல் போன்ற நடவடிக்கைகளுக்காக இந்த நிதியுதவி வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
இரத்தினக்கல் ஏற்றுமதியில் இலங்கை முன்னணி!
ஜப்பானிய பிரதமர் ஃபுமியோ கிஷிடா அடுத்த வாரம் இலங்கை விஜயம் - கடன் மறுசீரமைப்பு மற்றும் எதிர்கால முதல...
ஒரு இலட்சத்து 60 ஆயிரம் மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள், எதிர்வரும் 6 ஆம் திகதி ஏலத...
|
|