இலங்கையில் சமூகத்திற்குள் கொரோனா வைரஸ் தீவிரமடையும் ஆபத்து! வைத்தியர்கள் எச்சரிக்கை!
Monday, October 5th, 2020
கம்பஹா வைத்தியசாலையில் கொரோனா வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட பெண்ணுக்கு எதிர்பாராத விதமாக மேற்கொள்ளப்பட்ட பீசீஆர் பரிசோதனையிலேயே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என தொற்று நோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது.
அத்துடன் கறித்த பெண் இலங்கையில் சமூகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு நோயாளியாகும் என்றும் விசேட வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.
இலங்கையில் கொரோனா தொற்றியமைக்கான காரணம் கண்டுபிடிக்க முடியாத முதலாவது கொரோனா நோயாளி அவர் எனவும் விசேட வைத்தியர் குறிப்பிட்டுள்ளார். அவ்வாறானா நோயாளிகள் மேலும் சமூகத்தில் அடையாளம் காணுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. அதனால் முடிந்தஅளவு சமூகத்துடன் அதிகம் தொடர்புப்படுவதனை தவிர்க்குமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
நவீனமயப்படுத்தப்பட்ட பிரதமரின் பொதுமக்கள் தொடர்பாடல் பிரிவு பிரதமரினால் திறந்து வைப்பு!
71 ஆயிரம் விவசாய குடும்பங்களுக்கு இலவச யூரியா உரத்தை வழங்குகிறது விவசாய அமைச்சு !
தனித்தனியே நின்று கட்சி அரசியல் செய்வதால் மக்களுக்கு எந்தப் பயனும் கிடைக்காது – ஜனாதிபதியின் கரங்களை...
|
|
|


