இலங்கையில் ஒரு கோடியே 18 இலட்சத்து 241 பேருக்கு தடுப்பூசி பெற்றுள்ளனர் – தொற்றுநோயியல் பிரிவு அறிவிப்பு!

Tuesday, August 31st, 2021

இலங்கையில் கொரோனா தடுப்பூசி திட்டத்தின் கீழ் நேற்றையதினம்வரை ஒரு கோடியே 18 இலட்சத்து 241 பேருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன் தற்போதுவரை இலங்கையில் ஒரு கோடி இருபத்தி மூன்று இலட்சத்து 25 ஆயிரத்து 787 பேருக்கு ஏதாவதொரு கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் வழங்கப்பட்டுள்ளது.

இவர்களில் 71 இலட்சத்தி 73 ஆயிரத்து 120 பேருக்கு இரண்டாவது டோஸ் வழங்கப்பட்டுள்ளதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்படி, இதுவரையிலும் நாட்டில் முழுமையாக தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 71 இலட்சத்து 73 ஆயிரத்து 120 பேர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0000

Related posts: