இலங்கையில் இரண்டு இலட்சத்தை நெருங்கும் கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை – மரணங்களின் எண்ணிக்கையும் நாளாந்தம் அதிகரிப்பு!

Friday, June 4th, 2021

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 642 பேர் கடந்த 24 மணிநேரத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 264 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 95 ஆயிரத்து,811 ஆக உயர்வடைந்துள்ளது

இதேவேளை

கொரோனா தொற்றால் கடந்த 24 மணிநேரத்தில் பாதிக்கப்பட்ட மேலும் 42 பேர் உயிரிழந்துள்ளதாகவும் இதை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை ஆயிரத்து 608 ஆக அதிகரித்துள்ளது.

Related posts: