இலங்கையில் அதிகூடிய மின்சார தேவை நேற்று பதிவானது!
Thursday, April 20th, 2023அண்மைக் காலங்களில் இலங்கையின் நாளொன்றுக்கான அதிகூடிய மின்சார தேவை நேற்று (19) பதிவானதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகரவின் தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம், தேவைக்கு ஏற்ப நிகர மின் உற்பத்தி 49.53 கிகா வோட்டாக பதிவானதாகவ இன்று ( 20) ட்விட்டரில் பதிவில் அமைச்சர் குறிப்பிட்டார்.
இதற்கிடையில், இன்று காலை பதிவு செய்யப்பட்ட உண்மையான தேவையின்படி, இன்று மின் உற்பத்தி 50 கிகா வோட்டை தாண்டும் என மதிப்பிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இதன்படி, அண்மையில் நிறுவப்பட்ட ஹம்பாந்தோட்டை, டீசலில் இயங்கும் மின்பிறப்பாக்கிகள் உட்பட இலங்கை மின்சார சபையின் அனைத்து அனல்நிலையங்களும் மின் உற்பத்திக்காக பயன்படுத்தப்படும் என அமைச்சர் உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
அடுத்த மாதம் நல்லிணக்க ஆலோசனை செயலணியின் அறிக்கை!
20 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பான விவாதம் நாளை!
2024 ஆம் ஆண்டுக்கான தரம் ஒன்று மாணவர் அனுமதி - கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டது சுற்றறிக்கை!
|
|