இலங்கையின் 34 ஆவது பொலிஸ் மா அதிபராக பூஜித் ஜயசுந்தர!

இலங்கையின் 34 ஆவது புதிய பொலிஸ் மா அதிபராக பூஜித் ஜயசுந்தரவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் மா அதிபராக பதவியாற்றி எம்.கே. இலங்கக்கோன் ஒய்வு பெற்றதை தொடர்ந்து பொலிஸ் மா அதிபர் பதவிக்கான வெற்றிடம் நிலவியது. இந்நிலையிலேயே புதிய பொலிஸ் மா அதிபராக நியமிக்கும் வகையில் பிரதி பொலிஸ் மா அதிபர்கள் மூவர் அரசியலமைப்புச் சபைக்கு இன்று அழைக்கப்பட்டனர்.
பிரதி பொலிஸ் மாஅதிபர்களான ஜீ.டீ.விக்கிரமரத்ன பூஜித் ஜெயசுந்தர மற்றும் எஸ்.எம்.விக்கிரமசிங்க ஆகிய பிரதி பொலிஸ் மா அதிபர்களுக்கே அரசியலமைப்புச் சபை அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் புதிய பொலிஸ் மா அதிபராக பூஜித் ஜெயசுந்தரவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் ஜனாதிபதிக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அதன்பின்னர் இறுதி தீர்மானம் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
கூவில் கிராம அபிவிருத்திச் சங்கத்திற்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சியினால் உபகரணங்கள் வழங்கிவைப்பு!
ஒரு தொகுதிஅகதிகள் இந்தியாவிலிருந்து இன்று நாடு திரும்புகின்றனர்!
சாதாரண மக்களின் நலன்களை முன்னிறுத்தி வெகு விரைவில் புதிய வரவு செலவுத் திட்டம் - புதிய பிரதமர் ரணில்...
|
|