இலங்கையின் தேசிய பாதுகாப்பின் பலம் குறித்த கேள்விக்கு இடமில்லை – இராணுவத் தளபதி உறுதிபடத் தெரிவிப்பு!

Sunday, June 12th, 2022

இலங்கையின் தேசிய பாதுகாப்பின் பலம் குறித்த கேள்விக்கு இடமில்லை என இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே தெரிவித்துள்ளார்.

கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும் விவசாய சமூகத்துக்கு இலங்கை இராணுவம் தனது அதிகபட்ச ஆதரவை வழங்கும். உணவு நெருக்கடிக்கு எதிரான தனது போரின் முதல் படியாக, அரசாங்கத்தால் கைவிடப்பட்ட காணிகள் தொடர்பில் இராணுவம் விசாரணை நடத்தியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

விவசாய சபையின் அறிவுறுத்தலின்படி, இந்த வெற்று நிலங்களில் இராணுவம் விவசாயம் செய்ய ஆரம்பிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

அரசியல்வாதிகளின் வீடுகளுக்கு தீ வைக்கப்படும் போது இராணுவத்தினரும் இருந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டையும் அவர் மறுத்துள்ளார்.

அச்சுறுத்தலை தடுக்க கடமையில் இருந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்ததாக அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: