இலங்கையின் ஜனாதிபதி கோட்டாபய மற்றும் அவரின் சகோதரர் பசில் வெளியேறுவதற்கு உதவவில்லை – இந்தியா மறுப்பு!
Wednesday, July 13th, 2022இலங்கையின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அவரின் சகோதரர் பசில் ராஜபக்ஷ ஆகியோர் நாட்டில் இருந்து வெளியேறுவதற்கு இந்தியா வசதிகளை செய்து கொடுத்ததாக வெளியான ஊடகத் தகவல்களை இந்தியா மறுத்துள்ளது.
இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரகம் இந்த மறுப்பு வெளியிடப்பட்டுள்ளது. அத்துடன் இந்த தகவல் அடிப்படையற்றது என்றும் உயர்ஸ்தானிகரகம் குறிப்பிட்டுள்ளது.
இந்தநிலையில் தொடர்ந்தும், இலங்கை மக்களின் அபிலாஷைகளை அறிந்து ஜனநாயக வழிகளில் இலங்கை மக்களுக்கு உதவியளிக்கவுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
நிதி பற்றாக்குறை: நிதி மோசடிப் பிரிவு செயலிழப்பு !
நாட்டிலேற்பட்டுள்ள கொரோனா வைரஸின் தாக்கம் வலுவிழந்து செல்ல மேலும் இரண்டு வருடங்கள் ஆகலாம் - சுகாதார ...
எரிபொருள், எரிவாயு மற்றும் மின்சார நெருக்கடி அடுத்த வாரத்திற்குள் தீர்க்கப்படும் - நிதி அமைச்சர் பசி...
|
|