இலங்கையின் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 935 ஆக உயர்வு!
Saturday, May 16th, 2020இலங்கையில் நேற்று புதிதாக 10 கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் நேற்று அடையாளம் காணப்பட்ட 10 நோயாளிகளில் 9 பேர் கடற்படை சிப்பாய்கள் என அவர் தெரிவித்துள்ளார். மற்றைய நபர் கடற்படை சிப்பாய்களுடன் நெருங்கி செயற்பட்டவர் என அவர் கூறியுள்ளார். இலங்கையில் இதுவரையில் அடையாளம் காணப்பட்டுள்ள கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 935 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 477 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 449 பேர் வைத்தியசாலைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது
Related posts:
கொக்குவில் பகுதியில் வாள் வெட்டக்குழு அட்டகாசம் !
அனைத்து பரீட்சார்த்திகளுக்கும் ஒரே நீதி - பரீட்சைகள் ஆணையாளர்!
வீதி விபத்து - கடந்த 10 ஆண்டுகளில் 27,000 பேர் மரணம் - பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் தகவல்!
|
|